தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது தெரியுமா?

உணவு இல்லாமல் கூட சில நாட்களுக்கு இல்லாமல் இருந்துவிட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவையே செரிமானமடையச் செய்து, கழிவுகளை வெளியேற்றச் செய்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

அவ்வாறு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் என நாம் இங்கு பார்போம்.

காலையில் தூங்கி எழுந்ததும் முதல் வேளையாகத் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றம் அடையும். சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கவே கூடாது.

உணவு உண்ணும் முன்பு ஒரு பெரிய டம்ளர் நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் உணவில் உள்ள எல்லா ஊட்டச்சத்துக்களும் முழுமையாகக் கிடைககும்.

ஜீரண ஆற்றலையும் மேம்படுத்தும் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கலாம். உணவுகளை எளிதாக உடைத்து அதிலுள்ள ஊட்டச்சத்தை உடல் உறிஞ்ச உதவி செய்யும். அதிகமாக குடிக்கக் கூடாது. அதனால், வயிற்றில் உள்ள அமிலத்தன்மை குறைந்து ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இரவு தூங்கச் செல்லும்முன்பாக தண்ணீர் குடித்து விட்டு படுத்தால் அந்த சமயங்களில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க முடியும்.

உடற்பயிற்சியின் முன்,இடையில் மற்றும் பின் தண்ணீர் குடிப்பது நல்லது தான். தசைகளில் ஏற்படும் தளர்வைப் போக்கும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.