நேர்மையை விதையுங்கள்.

நாம் எந்தச் செயலை மேற்கொண்டாலும், வெற்றி பெற வேண்டுமென்றால்,  வெற்றி பெறுவதற்கு மிகவும் அடிப்படையான மூலப்பொருள்  என்னவென்றால்: எண்ணத்தில் தூய்மை. பணியில் நேர்மை...

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி, தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்...

எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். 

உங்களில் ஒருவர் தான் அடுத்து என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்...

உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ!, அவர் தான் அடுத்த மேலாளர் என்றார்...

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு, தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும். யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ!, அவரே என் நிறுவனப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்...

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ரபீக்கும் ஒரு விதை வாங்கிச் சென்றார்.... 

தன் மனைவியிடம் முதலாளி சொன்னதைக் கூறினார். அவர் மனைவி தொட்டி, உரம், தண்ணீர் எல்லாம் அவருக்குக் கொடுத்து அந்த விதையை நடுவதற்கு உதவி செய்தார்....

ஒரு வாரம் கழிந்தது. நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். ஆனால்!, ரபீக்கின் தொட்டியில் செடி இன்னும் வளரவே தொடங்கவில்லை...

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்களானது. அப்பொழுதும் அவரது தொட்டியில் செடி வளரவே இல்லை. தாம் விதையை வீணாக்கி விட்டேனா!, என்று புலம்பினார்...

ஆனால்!, நாள்தோறும் செடிக்குத் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை. தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் எவரிடத்தும் சொல்லவில்லை...

ஓராண்டு முடிந்து விட்டது, அனைவரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்...

ரபீக் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்துப் போகமாட்டேன் என்று சொன்னார். அவர் மனைவி சமாதானப்படுத்தி, நீங்கள் ஓராண்டு முழுக்க உங்கள் முதலாளி கூறியது போன்றே செய்தீர்கள். செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியது இல்லை. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்துச் சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றார்...

ரபீக்கும் காலி தொட்டியை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். அனைவரது தொட்டியையும் பார்த்தார். விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன. இவரது தொட்டியைப் பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்...

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு கூறினார். அருமை!, எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்துள்ளீர்கள்...

உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்றார். எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார். ரபீக் கடைசி வரிசையில் நின்றிருந்தார் அவரை அருகே வருமாறு அழைத்தார்...

ரபீக் தன்னை வேலையை விட்டு நீக்கத் தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றார்...

முதலாளி ரபீக்கிடம் உன் செடி எங்கே என்று கேட்டார். ஒரு ஆண்டாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னார்...

முதலாளி, ரபீக்கை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார். பிறகு ரபீக் தோளில் கையை போட்டுக் கொண்டு நமது நிறுவனத்தின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்...

ரபீக்கிற்கு ஒரே அதிர்ச்சி!, தன் தொட்டியில் செடி வளரவே இல்லை, பிறகு ஏன் நமக்கு இந்தப் பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிப் போனார்...

சென்ற ஆண்டு நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்கச் சொன்னேன் அல்லவா!, அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்

அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்துக் கொண்டு வந்தீர்கள்...

ரபீக் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார், ஆகவே!, அவரே என் நிறுவனத்தை நிர்வாகிக்கத் தகுதியானவர் என்றார்...

ஆம் நண்பர்களே...!

🟡 நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் வெற்றிகள் நம்மைத் தேடி வரும்…!

🔴 வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான். உண்மையும் நேர்மையும் உங்களைப் பாதுகாக்கும்...!!

⚫ நேர்மை ஒரு போதும் வீண் போகாது. நேர்மையை விதையுங்கள் ; பதவியும், புகழும் உங்களைத் தேடி வரும்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.