உங்களை நம்புங்கள்

நம்மைப் பற்றி நாமே தாழ்வாக நினைப்பது, நமது திறமைகளை வீணடித்து விடும். நம்மைப் பற்றி நாம் எப்பொழுதும் உயர்வாகவே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்...

அப்பொழுது தான் நாம் எடுத்த செயலை வெற்றியடைய வைக்க முடியும் பல முன்னேற்றங்களைப் பெறலாம். அதற்கு முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். அது நமக்கு மாபெரும் வெற்றிகள் கிடைப்பதோடு, நமது எதிரிகள் கூட நம்மை வாழ்த்துவதற்கு முன் வருவார்கள்...

இந்த எண்ணம் தான் நம்மை உயர்த்திக் கொண்டே போகும்!, உயர உயரப் பறந்து செல்லும் பறவைகளைப் போல, நாமும் வாழ்க்கை என்ற வான்வெளியில் உயர்ந்துக் கொண்டே செல்லலாம்...

மாவீரன் நெப்போலியனுக்கு, அவருடைய தளபதிகள் விருந்து கொடுத்தார்கள். பழரசக் கோப்பைகளைத் தட்டி இசை எழுப்பி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைச் கூறிக் கொண்டு இருந்தார்கள்...

அதனைத் தொடர்ந்து நெப்போலியனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் குண்டு வெடிக்க வேண்டும். இந்த ஏற்பாடுகளை தளபதிகள் செய்திருந்தார்கள். நெப்போலியனுக்கு இந்த விபரம் தெரியாது...

அனைவரும் வாழ்த்துக்களைப் பகிர்ந்தப் பின்பு, குண்டு வெடித்தது. தளபதிகளின் கைகளிலிருந்த பழரசக் கிண்ணங்கள் அதிர்ச்சியில் கீழே விழுந்து நொறுங்கி விட்டன...

ஆனால்!, நெப்போலியன் கை மட்டும் சிறிதும் நடுங்கவில்லை. அவர் கையிலிருந்த கிண்ணத்தில் பழரசம் கூடத் ததும்பவில்லை...

இதைப் பார்த்த தளபதிகள் நெப்போலியனிடம் கேட்டார்கள்...

“பிரபுவே! இது நாங்கள் செய்த ஏற்பாடு தான்!, இருந்தும் கூட நாங்கள் ஏமாந்து பழரசக் கிண்ணங்களைத் தவற விட்டு விட்டோம். ஆனால்!, உங்களுடைய கை சற்றும் நடுங்கவில்லை. எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள்!” என்று வியந்துப் பாராட்டினார்கள்...

உடனே நெப்போலியன் சொன்னார். “அதனால் தான் நான் சக்கரவர்த்தியாக இருக்கிறேன். நீங்கள் தளபதியாக இருக்கின்றீர்கள்” என்றார்...

உண்மை தான்!, நெப்போலியனுக்கு தன்னம்பிக்கையும், மனஉறுதியும் இருந்தது. அத்துடன் எதிலும் ஏமாந்துப் போகாத விழிப்புணர்வு அதிகமாக இருந்தது...

நெப்போலியனின் மாபெரும் வெற்றிகளுக்கு இவைகள் தான் காரணம், ஒவ்வொரு கணமும் நெப்போலியன் தன்னை மிகவும் நம்பினார்...

ஆம் நண்பர்களே...!

🔴 தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடாமுயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் கூறுகிறோம், இவைகளையெல்லாம் வெறுமனே பின்பற்ற முடியாது...!

⚫ தன்னம்பிக்கை இருந்தால் தான் அவையெல்லாம் கைகூடும். எனவே!, எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தன்னை நம்புதலாகும். நம்புங்கள் நம்மால் முடியும்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.