சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வோம்

தனிமனித வாழ்வில் துவங்கி, பொதுவாழ்க்கை, குடும்பம், கொடுக்கல் வாங்கல், அரசியல் என மனித சமூகத்தின் அனைத்திலும் ஆளுமை செலுத்துகிற ஆற்றல் கொண்ட ஓர் அற்புதப் பண்பு தான் சகிப்புத்தன்மையாகும்.

சகிப்புத்தன்மையை இழந்து விட்டால் நம் நிலை தவறி விடும். வாழ்க்கைப் போகும் வழியும் மாறி விடும். 

எப்போது ஒருவர் நம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால், நாமும் அவரிடம் அப்படியே நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் பழி வாங்கும் தன்மை. பழி வாங்கும் தன்மையை விட்டுவிட்டால் அதுதான் சகிப்புத்தன்மை.

அதேபோல மற்றவர்கள் எல்லாவிதத்திலும் நமது விருப்பத்திற்கு ஏற்பவே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், அவர்களுக்குரிய முறையில் அவர்கள் இருப்பார்கள் என்று ஏற்றுக் கொண்டால் அது சகிப்புத்தன்மை.

உலகில் நிலவும் பல்வேறு கலாசாரங்களையும் ஏற்றுக் கொள்வதையே சகிப்புத்தன்மை என்று அழைக்கிறோம்...!

மனிதகுலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாக, சகிப்புத் தன்மை நம்மிடையே இருக்க வேண்டும்.

சகிப்புத்தன்மை என்பது சாதி, மத, இன, மொழி உணர்வுகளால் வரும் பற்று அல்ல, மாறாக அது ஒவ்வொருவரின் மனதிலிருந்து எழும் வாழ்வியல் நெறி...

ஆம் நண்பர்களே...!

🟡 புத்தர், மகாவீரர் போன்ற சகிப்புத்தன்மை கொண்ட ஞானிகளைத் தந்த நம் நாட்டுக்கு, சகிப்புத்தன்மை என்ற மேலான நெறியை உலக அளவில் எடுத்துச் செல்லும் தகுதி அதிகமாகவே உள்ளது...!

🔴 வாழ்க்கையின் அடிப்படை உணர்ச்சிகளான அன்பு, நட்பு, ஈதல், சான்றாண்மை உள்ளிட்ட பண்புகளுடன் கல்வியறிவும் பெற்று சகிப்பு தன்மையுடன் வாழ முடிவெடுப்போம்...!!

⚫ எப்போது சகிப்புத்தன்மையை மேற்கொள்கிறோமோ!, அப்போதே வியக்கத்தக்க வகையிலான வாழ்க்கையை நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கி விடுவோம். ஏனெனில்!, சகிப்புத் தன்மையே மானுடத்தின் மேன்மை...!!!

🔘 சகிப்புத்தன்மையயை வளர்த்துக் கொள்வோம். சகிப்புத் தன்மை அனைவரிடத்திலும் இருந்து விட்டாலே போதும் உலகம் முழுவதும் அமைதிப் பூங்காவாகத் திகழும்...!

- உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.