வெறும் வயிற்றில் எப்போதும் இதனை உட்கொள்ளாதீர்கள்

நமக்கு ஒரு நாளுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் காலை உணவின் மூலமே கிடைக்கின்றன. எனவே காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்குப் பிறகு காலையில் சாப்பிடுவதால் உணவுகளைத் தேர்வு செய்வதில் அதிக கவனம்கொள்ள வேண்டும்.

அமிலச் சுரப்பை அதிகம் தூண்டும் உணவுகளைக் காலையில் தவிர்க்கவேண்டும். 

📌தண்ணீருக்கு பின் காபி

பெரும்பாலானோருக்கு காலையில் எழுந்ததும் டீ, காபி பருகும் பழக்கம் இருக்கும். ஆனால் வெறும் வயிற்றில் டீயோ, காபியோ பருகுவது தவறான பழக்கம்.

அதில் உள்ள ‘காஃபின்’ வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற அசவுகரியங்களை உண்டாக்கும்.

அதனால் காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.

📌மாத்திரை சாப்பிடக்கூடாது

வெறும் வயிற்றில் சாக்லேட், சுவீட்கள் போன்ற இனிப்பு பலகாரங்களை சாப்பிடக்கூடாது. அவை இன்சுலின் அளவை அதிகப்படுத்திவிடும்.

தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

பொதுவாகவே வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் உள்ள அமிலத்துடன் கரைந்து வயிற்று படலத்தை அரிக்க தொடங்கிவிடும்.

தேவையற்ற உடல் உபாதைகள் உண்டாக காரணமாகிவிடும். மருத்துவர்கள் பரிந்துரைத்தால் வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடலாம். 

📌சிட்ரஸ் பழங்கள்

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்துவிடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளதால் இவை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்றதல்ல.

இவை அமிலச் சுரப்பை அதிகப்படுத்தி நெஞ்சு எரிச்சலையும் குடல் புண்ணையும் உண்டாக்கிவிடும்.

📌சாலட் 

எப்போதுமே தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் டான்னிக் அமிலம் இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

குறிப்பாக அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காலையில் பச்சை காய்கறிகளால் ‘சாலட்’ தயாரித்துச் சாப்பிடுவது நல்லதல்ல. இதில் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளன.

இந்த அமிலங்கள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும். சில நேரங்களில் அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.

📌குளிர்பானங்கள் 

காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி விடும்.

செரிமான கோளாறுகளும் உண்டாகக்கூடும். சோடா உளஅளிட்ட குளிர்பானங்களையும் வெறும் வயிற்றில் பருகக்கூடாது.

அது வயிற்று பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து விடும். அதன் காரணமாக உணவு செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். குளிர்பானங்களை பருகாமல் இருப்பது நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

📌முட்டை சாப்பிடலாம்

காலையில் ஓட்ஸ் உணவுவகைகளை சாப்பிடுவது நல்லது. அது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதற்கு உதவும். காலை உணவுடன் முட்டை சாப்பிட்டு வருவது நல்லது. அது கலோரியின் அளவை குறைப்பதற்கு துணைபுரியும்.

காலையில் வெறும் வயிற்றில் தர்ப்பூசணி சாப்பிடுவது நல்லது. அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கண்கள் மற்றும் இதயத்திற்கும் நல்லது.

காலையில் தானியங்களில் தயாரித்த பிரெட் சாப்பிடுவது நல்லது. அதில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும்.

📌வயிறு கோளாறு சரியாகும்

உடல் நலனுக்கு நன்மை சேர்ப்பதில் தேனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனை தினமும் காலையில் உணவு பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு சக்தியை கொடுக்கும்.

மூளை சுறுசுறுப்புடன் செயல்படவும் துணை புரியும். புத்துணர்ச்சி தரும் ஹார்மோன்களின் சுரப்பையும் அதிகரிக்க செய்யும்.

பாதாம் பருப்பை தினமும் 6 வீதம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அவை செரிமானத்தை எளிமைப்படுத்தும்.

அல்சர், வயிற்று கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். முதல்நாள் இரவில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட வேண்டும்.

பப்பாளி பழத்தில் தாதுக்கள், வைட்டமின்கள் இ, வைட்டமின் சி போன்றவை இருக்கின்றன. அதனை காலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு துணை புரியும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.