நெல்லிக்காய் உண்பதால் இத்தனை நன்மையா?

நெல்லிக்காய் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனி. ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் 'சி' யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய்.

கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

❇️கொழுப்புச்சத்து

கொழுப்புச்சத்து உடலிற்குத் தேவையான ஒன்று. உடலிற்குத் தேவைப்படாத அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்தக் குழாய்களில் படிய ஆரம்பிக்கும். இதுதான் மாரடைப்பு ஏற்பட காரணமாகி விடுகிறது.

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும்.

இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். இத்தனை நன்மைகள் நிறைந்துள்ள நெல்லிக்காயை வெறும் வயிற்றில் உண்டால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

❇️செரிமானப் பிரச்சினை

மலச்சிக்கல் முதல் வீக்கம் வரை வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கி செரிமானத்தை மேம்படுத்தும். நெல்லிக்காய் செரிமானத்திற்கு மிகவும் உதவும் சக்திகளை அளிக்கிறது.

அதிகமான நார்ச்சத்து உள்ளடக்கம் காரணமாக குடல் இயக்கத்தை சீராக்க நெல்லிக்காய் உதவுகிறது.

❇️நோய் எதிர்ப்பு சக்தி

பருவ கால நோய்களை அண்டாமல் தடுத்து, நோய் தொற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

❇️உடல் பருமன்

நெல்லிக்காய் சாறு, தூள் மற்றும் பழங்களை உட்கொள்வது மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதனால் உங்கள் உடலில் கொழுப்பு எரியும் செயல்ப்பாடு ஊக்குவிக்கப்படுவதால் எடை இழப்பு மற்றும் உடல் பருமனை எதிர்த்து போராட இது உதவுகிறது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.