நீரிழிவு நோயை கட்டுப்படுத்துமா இந்த பழம்

பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நாவல் பழம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாக உதவுகிறது.

இதில் ஜம்போலின் என்ற கலவை உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும்.

📌📌நாவல் பழத்தை உட்கொள்வதற்கான 5 வழிகள்

நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நாவல் பழத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க நாவல் பழத்தை எப்படி சாப்பிடுவது என்று பார்க்கலாம்.

❇️நாவல் பழ சாலட்

நாவல் பழத்தை சாலட்டாக உட்கொள்ளலாம். எந்த சாலட் செய்தாலும் அதில் நாவல் பழங்களை வெட்டி அதை உட்கொள்ளலாம்.

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வைப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

❇️நாவல் பழ ஃபிஸ்

ஃபிஸ் செய்து நாவல் பழத்தை உட்கொள்வது மிகவும் ஸ்டைலான வழியாக கருதப்படுகின்றது. இதற்கு, முதலில் எலுமிச்சை சோடாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் நாவல் பழங்களின் கூழை கலக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு, ஒரு கிளாஸில் பரிமாறவும்.

❇️நாவல் பழ அல்வா

நாவல் பழ அல்வா தயார் செய்ய முதலில் இந்த பழத்தின் கூழ் எடுத்து அதில் தேங்காய் பால், தேன் மற்றும் சியா விதைகளை கலக்கவும். இது மிகவும் சுவையாக இருப்பதோடு ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.

❇️நாவல் பழ ஜூஸ்

நாவல் பழ ஜூஸ் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை செய்ய இந்த பழத்தின் கூழ் எடுத்து அதிலிருந்து விதைகளை அகற்றவும். இப்போது இதனுடன் கருப்பு உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்கவும்.

❇️ நேரடியாக சாப்பிடுங்கள்

நாவல் பழங்களை அப்படியே சாப்பிடலாம். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மேலும் அதிகரிக்கும் எடையை கட்டுப்படுத்தவும் இது உதவும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.