பயம்...! பயம்...! பயம்...!

நம்மைக் கோழையாக்குவதும் பயம் தான். நம்மைக் குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம் தான்...!

இரண்டு விதத்தில் பயம் ஏற்படும். ஒன்று ஆழ்மனதில் பதிந்து விட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும் மறைந்து விடும் தற்காலிகப் பயம்...

எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக இருப்பவர்கள் அதுவே அவரை மனநலம் குன்றியவராக ஆக்கி விடும்...

சிறுவயதில், நம்மை அடக்க அல்லது கீழ்ப்படிய வைக்க “பூச்சாண்டி’ காட்டுவது நடைமுறை வழக்கம் என்றாலும், அதுவும் ஒருவகையில் மனதளவில் நம்மை பாதிக்க வைக்கும் செயல் தான்...

பெரியவர்களான பிறகு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் அடிப்படைக் காரணமே அது தான். இது வளர வளர பின்னாளில் மனோவியாதியாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு...

பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாகத் தட்டினால் பட்டென்று விழுந்து விடும் .அது போல துணிச்சலுடன் எதிர்கொண்டால் பயத்தையும் வெல்லலாம்...

மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மனஉறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது உறுதி...

பய உணர்வு ஏற்படும் நேரங்களில், பயம் நீங்கி தைரியம் பெறும் வகையில் மனதில் ஓடும் எண்ணத்தையும், சுற்றுப்புற சூழ்நிலைகளையும் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்...

ஆம் நண்பர்களே...!

பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்...!

கவலையும், அச்சமும் தான் ஒரு மனிதனை முன்னேற விடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!!

மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.