நாட்டு மக்களுக்கு முன்னறிவிப்பு இன்றி அதிகரிக்கப்படவுள்ள கட்டணம்!

𝑰𝑻𝑴 ✍️ எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ கொழும்பில் நேற்று(18.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்சீவ இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலுதம் தெரிவிக்கையில்,

𝑰𝑻𝑴 ✍️ குறித்த அமைச்சரவை பத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 30 மின்சார அலகுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர் 3000 ரூபாவை செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ எவ்வாறாயினும், மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்தது போன்று, இன்று அமைச்சரவை கூட்டத்தில் அவ்வாறான பிரேரணை சமர்ப்பிக்கப்படமாட்டாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை மேலும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை, ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

𝑰𝑻𝑴 ✍️ இது பெரும்பாலும் ஜனவரி மாத நடுப்பகுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் அளிக்கும் முன்மொழிவுகள் இதில் உள்ள போதிலும், ஒரு மின்சார அலகு குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.