பண்டிகைக் காலத்தில் மற்றுமொரு உணவுப் பொருளின் விலை அதிகரிப்பு.

பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையை அதிகரிக்க நேரிடும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகளவில் முட்டையை உற்பத்தி செய்பவர்கள், சந்தையில் முட்டைக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளமையால், வர்த்தகர்கள், முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, அந்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடும் முட்டைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், முட்டை உற்பத்தியாளர்களால், சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்று ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

பண்டிகைக் காலத்தில், ஒரு கேக் துண்டைக்கூட உண்ண முடியாத நிலை ஏற்படும். ஆகவே, நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம், முட்டை விலை தொடர்பில் உரிய தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கேட்டுகொண்டுள்ளார். 

முன்னதாக, கடந்த ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி, முட்டைக்கு உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை, இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையிலேயே இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும், முட்டை விலை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ், 40 ரூபா என்ற விலைக்கு, முட்டையை விற்பனை செய்ய இன்னும் 6 மாத காலத்தில் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.