4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் 4 கால்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் சிக்கந்தர் கம்பூ பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாஹா என்ற பெண், நான்கு கால்களுடன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது நாடு முழுவதும் ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் தூண்டியது.

கமலா ராஜா மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவில் புதன்கிழமை பிறந்த அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், குழந்தையின் எடை 2.3 கிலோவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தற்போது குழந்தையை பரிசோதித்து வரும் மருத்துவர்கள் குழு, குழந்தையின் கூடுதல் கால்களை அகற்ற முடியுமா என்று யோசித்து வருகின்றனர்.

குழந்தையை பரிசோதிக்கும் டாக்டர்கள் குழுவின் கூற்றுப்படி, குழந்தையின் குறைபாடு இஸ்கியோபகஸ் (Ischiopagus) எனப்படும் ஒரு நிலை காரணமாகும். அதாவது, கருவில் ஒட்டிக்கொண்ட இரட்டையர்களாக கரு உருவாம், ஆனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் இரட்டையர்களில் ஒரு உடல் முற்றிலும் சிதைந்து, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளை விட்டுவிட்டு மற்ற சிதையாத கருவின் உடலுடன் இணைந்துவிடும்.

இந்த அரிதான மற்றும் அசாதாரணமான பிறப்பு பாலிமிலியா எனப்படும் ஒரு நிலை காரணமாகும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.