2 வயது குழந்தையை விழுங்கிய நீர்யானை!

உகாண்டாவில் 2 வயது குழந்தையை நீர்யானை விழுங்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீர்யானை விழுங்கி சிறுவன் உயிர்பிழைத்த அதிசயம்

உகாண்டாவில் நடந்த ஒரு அதிசய சம்பவத்தில், முரட்டு நீர்யானை விழுங்கி பின்னர் வெளியே கக்கிய 2 வயது சிறுவன் உயிர்பிழைத்துள்ளான்.

இகா பால் என அடையாளம் காணப்பட்ட 2 வயது சிறுவன், டிசம்பர் 4 அன்று கட்வே கபடோரோ நகரில் உள்ள ஒரு ஏரியின் கரையில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது பசியுடன் இருந்த நீர்யானை தனது பெரிய தாடைகளால் அவனைப் பிடித்தது.

நீர்யானை குழந்தியை முழுவதுமாக விழுங்கும் முன், அருகில் நின்ற கிறிஸ்பாஸ் பகோன்சா என்ற நபர், அதன் மீது பாறை கற்களை வீசத் தொடங்கினார். அதனால், நீர்யானை சில நொடிகளில் சிறுவனை வெளியே துப்பியது.

அந்த விலங்கு அவரை தலையில் இருந்து பிடித்ததாகவும், உடலின் பாதியை விழுங்கியதாக பொலிஸார் அறிக்கையில் தெரிவித்தனர்.

மேலும், சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசியைப் பெற்ற பிறகு, அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஏரிகள் மற்றும் வனவிலங்கு மையங்கள் போன்ற விலங்குகள் சரணாலயங்களுக்கு அருகில் தங்கியிருக்கும் பெற்றோரை, முதலைகள் மற்றும் நீர்யானைகள் போன்ற தாக்கும் விலங்குகள் குறித்து அவதானமாக இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.

நீர்யானைகள், தாவரவகைகளாக இருந்தாலும், அச்சுறுத்தப்படும்போது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் என எச்சரித்துள்ளனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.