மலேசிய மண்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு – 79 பேர் மாயம்.

 

மலேசியாவில் சிலாகுர் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கோலாலம்பூருக்கு வடக்கே 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மத்திய சிலாங்கூர் மாநிலத்தில் சுற்றுலா பகுதியான படாங் கலி என்ற இடத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்படும்போது 92 பேர் சம்பவ இடத்தில் இருந்ததாக மலேசிய தேசிய பேரிடர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த மண்சரிவில் சிக்சி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 79 பேர் மாயமாகியுள்ளனர்.

இதற்கிடையில், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் வரை மழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சிலாங்குர் உட்பட பல மாநிலங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.