ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள புதிய நடைமுறை.

பாடசாலை வகுப்புக்களுக்கு இதன்பின்னர் தேசிய கல்வி பல்கலைக்கழகத்தில் 4 வருட காலம் பட்டதாரி மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்றவர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் ஜெயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (24) பாராளுமன்ற அலுவல்கள் ஆரம்பமான போது விசேட அறிக்கை ஒன்றை விடுத்து அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஆசிரியர் சேவைக்கு ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு 2 வழிமுறைகள் உண்டு. பின்தங்கிய பிரதேசங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக டிப்ளோமா பட்டங்களை பெற்றவர்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

இதன்பின்னர் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வதில் மாற்று முறையிலாகும். 19 கல்வியல் கல்லூரிகளை ஒன்றிணைத்து தேசிய கல்வி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். 

இதில் 4 வருட காலம் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்ற பின்னரே பாடசாலை வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவர். செயல்திறன் மிக்க சிறப்பான ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.