கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான புதிய தகவல்.

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(30.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000  கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நாளொன்றில் சராசரியாக 1,500 கடவுச்சீட்டுகள் ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு 20,000 ரூபா அறவிடப்படுகின்றது.

மேலும், ஒரு வருடத்திற்குள்  கடவுச்சீட்டு தொலைந்து போனால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.