கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி.


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய போட்டி கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்ல குர்பாஸ் 68 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 229 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2.4 ஓவர்கள் நிறைவில் 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவதினால் இன்றைய போட்டியை கைவிட தீர்மானக்கப்பட்டுள்ளது

அதனடிப்படையில் இன்றைய போட்டி வெற்றி தோல்வியின் நிறைவடைந்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.