திருமணம் செய்துகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள்.

இன்று திடீரென திருமணம் செய்துகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள் இன்று கொழும்பில் மிகவும் சாதாரணமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

கசுன் ராஜித, சரித் அசலங்கா மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று தனித்தனி இடங்களில் திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று கண்டி பல்லேகலவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இவர்கள் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

எனினும், திருமண நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்று மாலைக்குள் அவர்கள் அணிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கண்டி, பல்லேகலையில் புதன்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்கு தயாராவதற்காக கிரிக்கெட் வீரர்கள் அணிக்கு திரும்புவார்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.