பற்களின் பிரச்னையை போக்கும் சிறந்த பழம்.


பற்களில் வலி, ஈறுவீக்கம், பயோரியா என்னும் பல் ஈறு அழிவு, பல்லில் சீழ்வடிதல், இரத்தம் வருதல், பல் அசைவு போன்ற பல் சம்பந்தமான கோளாறுகளை மாம்பழம் குணமாக்குகிறது.

பழங்களில் அனைத்து விதமான சத்துக்களும் காணப்படுகின்றன.அவற்றில் மாம்பழம் வடிவத்திலும், நிறத்திலும், ருசியிலும், அளவிலும் பலவகைகள் உண்டு. எந்த பழத்திலும் இல்லாத அளவு விட்டமின் ஏ உயிர்ச்சத்து மாம்பழத்தில் உள்ளது.

இந்த வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகளவில் இருப்பதால் இரத்தத்தை சுத்தம் செய்து உடலுக்கு நல்ல பலத்தைத் தருகின்றது.

❇️ பயன்கள்

இது இரத்த விருத்தியை உண்டாக்க, உடல் பலம் பெற, பற்களில் வலி, ஈறுவீக்கம், பயோரியா என்னும் பல் ஈறு அழிவு, பல்லில் சீழ்வடிதல், இரத்தம் வருதல், பல் அசைவு போன்ற பல் சம்பந்தமான கோளாறுகளை குணமாக்குகிறது.

மேலும் மாலைக் கண் நோய், கண்ணில் நீர் வடிதல், கண்வலி, கண் எரிச்சல், பார்வை மந்தம், கண் சிவத்தல், போன்ற கோளாறுகளினால் கடினப்படுபவர்கள் மாம்பழம் நிவாரணம் அளிக்கின்றது.  

❇️ அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளவுகள்.

அளவுக்கு  மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என சொல்வார்கள். அந்தவகையில் மாம்பழமும் அதற்கு விதிவிலக்கல்ல. 

மாம்பழத்தை அதிகளவில் சாப்பிட்டால் சீதபேதி உண்டாகும். இது உடலுக்கு அதிகளவு உஷ்ணத்தை ஏற்படுத்தும்.

மாம்பழத்தை உணவு உண்ட பின் சாப்பிட்ட வேண்டும்.இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல என்று கூறப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.