காணாமல் போன பாடசாலை சிறுமி தீவிர தேடுதலில் பொலிஸார்.

பாடசாலைக்கு சென்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 20ஆம் திகதி பாடசாலை சென்ற 14 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்தோடு அச் சிறுமியின் ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாயான சிறுமியினுடைய தந்தை அளுத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுமி வீட்டில் இருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும், தந்தையின் சட்டைப் பையில் இருந்து 3600 ரூபா பணத்தையும், சில ஆடைகளையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் அவரது மூத்த பிள்ளை வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் முகநூலில் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் களனி பகுதியைச் சேர்ந்த இளைஞனுடன் நட்பாக இருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.