தயக்கம் தவிர்.

வெற்றிக்கு இரண்டு எதிரிகள் உண்டு. அது தயக்கமும், முயற்சி இன்மையும் தான். துணிச்சலைத் தோழனாக்கிக் கொண்டால் தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்..

தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்து ஓடி வரும். தயக்கத்தை விரட்டும் முதல் கையாளும் முறையே நேர்மறை எண்ணங்கள் தான்.

என்னால் முடியும் என்ற எண்ணம் கொடுக்கும் நம்பிக்கை தயக்கத்தை விரட்டியடிக்கும். வெற்றியைத் தேடித் தரும்...

என்னால் முடியுமா...? - என்ற தயக்கம் தோல்வி எனும் படுகுழியில் தள்ளி விடும்.

யாரும் எமது வாய்மொழியை செவிமடுக்க மாட்டார்கள், எமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள், இது எமக்கு ஒவ்வாது என்பது போன்ற எதிர்மறை எண்ணங்களைக் குறைத்தாலே அனைத்தும் நலமாக நடப்பதை உணரலாம்.

மன உறுதியால் தேடியதைக் கண்டு, அதனை அடைந்தவர்கள் உண்டு. மன உறுதியின்மையால் பின்னடைவே வரும்...

அடுத்ததாக தயக்கத்தைக் களையவும் முயற்சி அவசியம்.

நாம் எழுத்தாளர் ஆக வேண்டுமானால், எழுதியெழுதிப் பழக வேண்டும், பேச்சாளராக பேசிப்பேசி பழக வேண்டும், வெற்றியை நோக்கிச் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்...

எனவே!, நீங்கள் எதற்காகத் தயங்குகிறீர்கள், எதைக் கண்டு நடுங்குகிறீர்கள் என்பதனை உணர்ந்து அதைப் போக்க முயற்சி செய்யுங்கள்...

அதற்கான மனத் தயாரிப்புகளுடன் அடுத்தடுத்த செயல்களைச் செய்யுங்கள். மன அமைதியுடன் ஒருமுகத் தன்மையுடன் செயல்பட்டு தயக்கத்தை விட்டொழியுங்கள்...

சோர்வாக இருப்பது, தயங்குவது, பின்வாங்குவது, ஆர்வம் குறைவாக இருப்பது, முடியுமா...? என சந்தேகிப்பது, முடிவெடுக்க முடியாமல் தயங்குவது, தன்னம்பிக்கையின்றி பேசுவது, செயல்படுவது எல்லாம் துணிவின்மையின் அடையாளங்கள்...

இதைக் கொடுப்பதும் தயக்கம் தான். தயக்கத்தை விட்டொழிக்கும் பொழுது துணிச்சல் தானே வரும், துணிச்சல் வந்தால் தன்னம்பிக்கையும் அதனுடனே வந்து விடும்...

நெப்போலியன் ஒரு நாட்டை கையகப்படுத்துவதற்காக, தம் படை வீரர்களை ஆற்றைக் கடந்து படகில் அழைத்துச் செல்வாராம்...

ஆற்றைக் கடந்ததும், படகுகளை எரிக்கச் சொல்வாராம், வெற்றி பெறாமல் புறமுதுகு காட்டி வந்தால், நாடு திரும்ப முடியாது என்ற திட மனப்பான்மையை வீரர்களின் மனதில் பதிய வைக்கத் தான் அவர் இப்படிச் செயல்படுவாராம்...

அந்தச் செயல், உறுதியாக எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்ற மன உறுதியை வீரர்களுக்குத் தந்ததாம். இது நெப்போலியனின் வெற்றிக்கான தந்திரங்களில் ஒன்றாகும்...

ஆம், நீங்கள் உங்களைப் பூனையாக நினைத்துக் கொண்டால் பூனை தான். அரிமாவாக எண்ணிக் கொண்டால் அரிமா தான்...

அதாவது மனம் எவ்வளவு துணிச்சலைக் கொண்டுள்ளதோ அந்த அளவில் உங்கள் வெற்றி உறுதி...

ஆம் நண்பர்களே...!

நெப்போலியன் மட்டுமல்ல, தயக்கம் தவிர்த்து துணிச்சலுடன் செயல்பட்டவர்கள் அனைவருமே இன்று வெற்றியாளர்களாகவும், வரலாற்றில் இடம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள்...

தயக்கத்தைத் தாங்கும் மனநிலையை அழித்தால், மகிழ்வாய் வாழலாம்...!

துணிச்சலைத் தோழனாக்கிக் கொண்டால், தயக்கம் எனும் எதிரியை விரட்டியடித்து தன்னம்பிக்கையை வளர்க்க முடியும்...

தயக்கத்தை விட்டொழித்தாலே வெற்றி விரைந்தோடி வரும்...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.