உயர்ந்தப் பண்புகள்.

நாம் பல செயல்களால் பாதிக்கப்பட்ட ஒரு கூட்ட நெரிசலில் இந்தக் காலத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றோம்..

நமது உடலில் உள்ள நல்ல ஒழுக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் நாம் சேகரித்து வைத்தது. ஆரோக்கியமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு இவைகள் வழி வகுக்கின்றன.

நாம் நம்மில் இருக்கும் விரக்தி, மற்றும் தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள், உடனடியாக வாழ்க்கையில் இருந்து அகற்றப்படாத போது, வாழ்க்கை முழுவதும் துக்கமாக நம்மைக் காயப்படுத்தி, நம் வேகத்தைக் குறைத்து விடுகிறது..

இவை கண்களில் உள்ள தூசி போல, எப்போதும் எரிச்சலூட்டும். இது நம் கால்களில் குத்திய முள் போன்றது, எப்பொழுதும் வலி தந்து கொண்டே இருக்கும்.

எனவே, நம் ஆற்றல் குறைவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், நம் வாழ்விலிருந்து இந்தக் களைகளை அகற்ற வேண்டும்.

எல்லோரும் தங்கள் சொந்த செயல்களின் விளைவைத் தாங்களே எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அதற்கு வேறு யாரும் பொறுப்பு ஏற்க மாட்டார்கள்..

நமக்கு விழிப்பு உணர்வு இல்லாவிட்டால்,  துன்பங்கள் நம் வாழ்வின் நல்ல பல குணங்களைக் கெடுத்து விடும். 

நமக்கு வழங்கப்பட்ட இவ்வாழ்க்கை ஒரு பரிசு.. சோம்பேறித்தனத்திற்கு இங்கு இடமே இல்லை. 

எனவே, உங்கள் தூக்கத்தில் இருந்து விரைவில் விழித்துக் கொள்ளுங்கள்.

பேராசை, சுயநலம், கோபம், சோம்பல், பொறாமை, சமநிலையற்றப் பார்வை, விரோதம் என்று பலவகைப்படும் தன்மைகளால் நிரம்பியவர்கள் எதிலும் நம்பிக்கை இல்லாமல்  வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள்..

அவரது வாழ்க்கை எந்த நோக்கம் இல்லாமல் மற்றும் சந்தேகம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.

விழிப்புணர்வு, கவனமின்மையின் காரணமாக துயரங்கள் அவர்கள் வாழ்வில் நுழைகின்றன. அவை  எல்லையற்ற பாதிப்புக்கு உள்ளாக்கும் முன்பு அவைகள் அகற்றப்பட வேண்டும். 

இல்லையெனில் வாழ்க்கை மகிழ்ச்சியை கொடுப்பதற்குப் பதிலாக மனச்சோர்வை ஏற்படுத்தும். 

அத்தன்மையை கொண்ட ஒருவர் நிலையற்ற தன்மையுடனும், தன்னம்பிக்கை இல்லாமலும் தான் இருப்பார்.

மறுபுறம், நற்பண்பு கொண்ட ஒருவர் வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்கிறார். ஏனென்றால், அவரிடம் நல்ல பண்புகள் குடி கொண்டு இருக்கின்றன.. ஆம்..நல்ல பண்பு மற்றும் நல்ஒழுக்கம்  என்பது, நகையை அலங்கரிக்கும் முத்துகளைப் போன்றவை. 

அவை, மென்மையான, ஆரோக்கியமான மற்றும் முற்போக்கான வாழ்க்கையை முடிவு செய்கின்றன. 

கெட்ட பண்புகளை கைவிடுவதன் மூலம்  உயர்தர வாழ்க்கையை மனிதன் வாழ முடியும். 

நல்லொழுக்கங்கள் தான் நம் குணங்களை வளர்த்து, நம் மனதை சுத்தப்படுத்தி, நமது தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கையை மதிப்புள்ளதாக அமைக்கிறது.

நல்ல சிந்தனையுள்ளவர்கள் பிரபஞ்சத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நியாயமான வழிகளில் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். 

அவர்கள் வறுமையில் வாடும் இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மற்றும் அவர்கள் தங்கள் உரையாடல்களில் மனமகிழும் சொற்களைப் மட்டுமே பயன்படுத்துகின்றனர். 

அவர்களின் அணுகுமுறை தூய்மையானது என்பதால், உண்மையான மகிழ்ச்சியும், அன்பும் மட்டுமே அவர்களிடம் நிலை கொண்டு இருக்கிறது..

நம் வாழ்வில் இருந்து முற்றிலும் தீமைகள் புரியும் கெட்ட பண்புகளை அகற்ற ஒரே வழி ஒவ்வொரு நாளையும் தூய மனதுடன், ஆற்றலுடன் அணுகுவதாகும்.

ஆம் .நண்பர்களே,

பிரபஞ்சம் இந்த விலையுயர்ந்த வாழ்க்கையை நமக்குக் கொடுத்து இருக்கிறது . 

நாம் அதை உணரவில்லையென்றால் , நாம் எதையுமே சாதிக்க முடியாது .. 

நல்லொழுக்கங்கள் நம் வாழ்வின் மதிப்பு மிக்க நகைகள் போன்றவை. 

நம் சிந்தனைகளின் திசை மாறும் போது, வாழ்க்கையும் மாறுகிறது .

உயர்ந்த ,தகுதியான , அமைதியான வாழ்க்கைக்கு இந்த பிரபஞ்சத்துடன் இணைந்து நாமும் செயல்படுவோம் .. நல்ல செயல்கள் புரிவோம். அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம் . வாழ்க்கையை எளிதாக்குவோம்.. 

உடுமலை சு.தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.