இந்த இலையில் இத்தனை மருத்துவ குணமா!

எலுமிச்சையின் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் எலுமிச்சை மட்டுமல்ல அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

எலுமிச்சம்பழத்தின் நீரை உட்கொள்வதன் மூலம் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி1 ஆகியவை நிறைந்துள்ளது.

அதேபோல் எலுமிச்சை இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலுக்குள் சென்று பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

📌 உட்கொள்ளும் முறை

முதலில் தண்ணீரை சூடாக்கி அதில் எலுமிச்சை இலைகளை கொதிக்க வைக்கவும். இலைகளை நன்கு வேக வைக்கும்போது ​​​​அவற்றின் நிறம் அழகற்றதாக மாறும், பின்னர் இந்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். இப்போது இந்த தண்ணீரில் சிறிது தேன் கலந்து குடிக்கவும்.

எலுமிச்சை இலை தண்ணீர் கிட்னி ஸ்டோனில் நன்மை பயக்கும். இதில் சிட்ரிக் அமிலம் நல்ல அளவில் இருப்பதால் சிறுநீரக கல் வளராமல் தடுக்க உதவுகிறது. எனவே எலுமிச்சை இலைகளின் சாறு சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்கிறது.

எலுமிச்சை இலைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன, இது தலைவலி மற்றும் பதற்றத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

எனவே அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால் எலுமிச்சை இலை தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். இந்த நீர் ஒற்றைத் தலைவலிக்கும் (மைக்ரைன்) நிவாரணம் அளிக்கும்.

எலுமிச்சை இலையில் உள்ள பண்புகள் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. என்.சி.பி.ஐ அறிக்கையின்படி எலுமிச்சை இலைகளின் நீர் மன அழுத்தத்தைப் போக்க நன்மை பயக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் நரம்புத் தளர்ச்சியும் நீங்கும்.

தூங்குவதில் சிக்கல் இருந்தால், எலுமிச்சை இலைகளை குடிப்பது நன்மை பயக்கும். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதனால் தூக்கமின்மை நீங்கும். அதேபோல் இந்த இலைகள் உடலின் சோர்வையும் நீக்க உதவும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.