எரிபொருள் இறக்குமதி குறித்து அரசாங்கம் விசேட தீர்மானம்!

ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய கச்சா எண்ணெயை நேரடியாக ரஷ்யாவிலிருந்தோ அல்லது இந்தியா மூலமாகவோ பெறுவதில் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர்,

"உக்ரைன் போரினால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது இரகசியமல்ல. ஆனால் எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெற முடிந்தால் அதற்காக பாடுபடுவோம். தற்போதைய எண்ணெய் விலையை எங்களால் தாங்க முடியாது.

நமது ஜனாதிபதி ஒருமுறை கூறியது போல், பெரிய நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்களில் நம்மைப் போன்ற சிறிய நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

அதன்படி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால், சர்வதேச சட்டங்கள், நெறிமுறைகள் மீறப்படாவிட்டால், கண்டிப்பாக ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவோம். ரஷ்யாவுடன் எங்களுக்கு நல்ல நீண்ட கால உறவு இருக்கிறது. 

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்வது மற்றைய நாடுகளுக்கு பிரச்சினையாக இருக்காது என எதிர்ப்பார்கிறேன். ரஷ்யாவின் எண்ணெய் சந்தைக்கு வருவதை எவரும் தடுக்க விரும்பமாட்டார்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.