தொழுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நாட்டில் தொழுநோயால் பாதிக்கப்படுவரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரச்சாரம் தெரிவிக்கின்றது .

அதன் பணிப்பாளர் நிபுணர் வைத்தியர் பிரசாத் ரணவீர, கூறுகையில் :-கடந்த வருடம் முதல் தற்போது வரை, நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 250 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளிக்கையில் “2021 முதல் 2022 ஆம் ஆண்டுவரை 14 வயதுக்கு குறைவான சுமார் 250 குழந்தைகள் இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதிகரித்து வரும் தொழுநோயாளிகளைக் கண்டறிந்து முறையான வைத்தியத்தை வழங்க வேண்டும் மேலும் மக்களுக்கும் இந் நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் தோலை விட குறைந்த நிறமுடைய ஒரு புள்ளி உங்களிடம் இருந்தால், இது முதன்மை அறிகுறியாகும். 

தொழுநோய், அல்லது அந்த புள்ளிகளில் உணர்வின்மை அல்லது கைகால்களில் உணர்வின்மை இருந்தால், அருகில் உள்ள தோல் மருத்துவ மனைக்குச் செல்லவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.