மருந்து தட்டுப்பாடு தொடர்பில் GMOA மீண்டும் எச்சரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் GMOA மீண்டும் எச்சரிக்கை.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA ) தெரிவித்துள்ளது. மருந்துகள் தட்டுப்பாடு/ மருந்துகளின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான தடைகள் போன்ற பல பிரச்சினைகள் சுகாதாரத் துறையிலிருந்து பதிவாகியுள்ளதாக GMOA குழுவின் உறுப்பினரான மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். கையிருப்பு குறைவாக உள்ளதால், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு மருந்து வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்யும் நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட போக்குவரத்துப் பிரச்சினைகள், நிதிப் பிரச்சினைகள் மற்றும் கொள்வனவுப் பிரச்சினைகள் காரணமாக மருந்து விநியோகஸ்தர்கள் இவ்வாறான வியாபாரத்திலிருந்து விலகிச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மருந்து தட்டுப்பாடு உண்மையான மற்றும் பரவலாக உள்ள பிரச்சினை என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த சில மாதங்களில் மருந்துகளின் விலைகளும் மூன்று அல்லது நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. மருந்து விநியோகத்தை பிரச்சினையின்றி மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியதை நினைவு கூர்ந்த அவர், உண்மையில் அது அவ்வாறு இல்லை எனவும் தெரிவித்தார். சுகாதார அமைச்சரின் அறிக்கை முற்றிலும் தவறானது. அரச வைத்தியசாலைகளுக்கு வெளியில் அதிக விலை காரணமாக மக்கள் தமக்குத் தேவையான மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார முறைகேடுகள் காரணமாக இலங்கையின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் எச்சரித்தார். வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான வினைத்திறன்மிக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/Ihy75z8 https://ift.tt/VpPr2KB 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/usmX0nq 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/BaNU8Ls 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/BWY8fr5
https://ift.tt/PBfDLG1

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.