பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பிரதான சந்தேக நபர் பலி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பிரதான சந்தேக நபர் பலி

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அண்மையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் இன்று (04) அதிகாலை 4 மணியளவில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவவின் பிரதான உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரைக் கைது செய்யச் சென்றபோது, ​​அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதுடன், பொலிஸார் மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்றுள்ளனர். பின்னர், சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டுள்ளார். இகல விதானகே ஜோசப் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி, புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இரு இளைஞர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை சம்பவத்தில் பிரதான சந்தேக நபர் இவராவார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/fvjdYUP https://ift.tt/NkPhLwG 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/TjtW5af 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/Uj4vNqF 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/zXsZgv2
https://ift.tt/XRAKTHm

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.