சர்வதேச யோகா தினத்தின் வரலாறும்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
சர்வதேச யோகா தினத்தின் வரலாறும் 


அதன் முக்கியத்துவமும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

 இந்தாண்டு, 8வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. சந்தேகமின்றி, யோகா உடல், மனம் மற்றும் ஆவி ஆகியவற்றை சமநிலையில் கொண்டு வருகிறது.

 யோகா என்பது ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொள்வது, ஒரு குறிப்பிட்ட உடல் தோரணையை வைத்திருப்பது, சுவாச நுட்பங்களைப் பயிற்சி செய்வது போன்ற உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும்.

 உலக யோகா தினம் 2022 சர்வதேச யோகா தினம் 2022 என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், யோகா ஸ்டுடியோக்கள் அல்லது பிற பொது இடங்களில் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதற்காக மக்கள் கூடுகிறார்கள்.

 யோகாவின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. *சர்வதேச யோகா தினத்தின் வரலாறு* பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார்.

 சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 11, 2014ஆம் ஆண்டு அன்று அறிவித்தது.

 2015 ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. *இந்தாண்டு, சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் என்ன?* 'மனிதகுலத்திற்கான யோகா' என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாகும்.

 தொற்றுநோய்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் கடினமான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவை நமது மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

இதன் விளைவாக, மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, மனநலக் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது, அத்தகைய சூழ்நிலையில் யோகாவைத் தழுவுவது அவசியமாகிவிட்டது.

 *யோகா தினத்தின் முக்கியத்துவம்* யோகா ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நம்பமுடியாத அளவிற்கு நன்மை பயக்கும். உடல் மற்றும் மனதின் சரியான செயல்பாட்டில் யோகா கவனம் செலுத்துகிறது. 

மக்கள் மிகவும் நெகிழ்வாகவும் வலுவாகவும் வைக்கவும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நம்பிக்கையை அதிகரிக்கவும் யோகாசனங்கள் உதவுகின்றன. யோகா ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

 கவலைகள், பிரச்னைகள் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து வெளியே வர யோகா உதவலாம். உடல், ஆன்மா மற்றும் மனம் ஆகியவற்றின் இணக்கத்தை யோகா பராமரிக்கிறது. 

யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்தால், பல உடல்நலப் பிரச்னைகளை சமாளிக்க உதவும். சுய விழிப்புணர்வு, தனிப்பட்ட சக்தி மற்றும் சுய குணப்படுத்துதலை ஊக்குவிக்க உதவுகிறது. 

இது மனதில் உள்ள தீங்கு விளைவிக்கும் எண்ணங்களையும் உடலில் உள்ள நச்சுகளையும் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நெகிழ்வுத்தன்மை, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/xArS2bg https://ift.tt/EIOhw6W

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/bvfpxMs
https://ift.tt/kTSBC0Q

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.