மின்வெட்டு தொடர்பான இறுதி தீர்மானம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
மின்வெட்டு தொடர்பான இறுதி தீர்மானம். 


நாளை (20) முதல் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் குறித்து இன்று (19) அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நாளாந்த மின் உற்பத்தி மற்றும் நிலவும் தேவையை கருத்திற் கொண்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும் நாளை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் தடைப்படாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்வி நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக நடத்துவதற்கு பாடசாலைகள் திட்டமிட்டுள்ளதால், பகலில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக பொது பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்றும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/8VvNIoH https://ift.tt/VYjuoDC 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/mgKSyhw
https://ift.tt/9IRk3Er

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.