விசேட புகையிரதங்கள் சேவையில்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
 விசேட புகையிரதங்கள் சேவையில் 


பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 09 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

இன்று (12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். இன்று அதிகாலை 12.40 மற்றும் இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரத்திற்கு இரண்டு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

13 ஆம் திகதி அதிகாலை 3.30, மதியம் 12.40, மாலை 04.40, மாலை 06.00 மற்றும் இரவு 09 மணிக்கு அனுராதபுரத்துக்கு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 குறித்த காலப்பகுதியில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 https://ift.tt/yIEAUQj https://ift.tt/zfwyXOH

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/9fBGTsD
https://ift.tt/sZpT7Sc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.