இரு புதிய அமைச்சுகளுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இரு புதிய அமைச்சுகளுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

இரண்டு புதிய அமைச்சு பதவிகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அமைச்சுகளின் கீழ் உள்ளடங்கும் திணைக்களங்கள், நியதிச் சட்ட நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் என்பன குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த சில நிறுவனங்கள் தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் குறித்த அமைச்சின் கீழ், ஸ்ரீலங்கா டெலிகொம், தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தேசிய முதலீட்டுச் சபை, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், துறைமுகநகர் பொருளாதார ஆணைக்குழு, தரக்கட்டளை நிறுவகம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் (ICTA), தாமரை கோபுரம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/yZWevsB https://ift.tt/h0Qjm4t #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/WceNxZk
https://ift.tt/HprVALF

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.