வாடகைக்கு வாகனங்களை பெற்று மோசடி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வாடகைக்கு வாகனங்களை பெற்று மோசடி.

கிளிநொச்சி பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் வாகனங்களை வாடகைக்கு எடுத்து திருப்பிக் கொடுக்காத பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 27, 29 மற்றும் 37 வயதுடைய பிலிமத்தலாவ மற்றும் தந்துரே பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் மூவருடன் ஐந்து கார்கள், இரண்டு வேன்கள் மற்றும் ஜீப் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன. கேகாலை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மத்துகம விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ஏழு சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் நேற்று (09) மாவனல்லை நீதவான் நீதிமன்றத்தில்ல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கேகாலை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (அரசாங்க தகவல் திணைக்களம்) ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/yZWevsB https://ift.tt/h0Qjm4t #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/WceNxZk
https://ift.tt/HprVALF

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.