பேருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பேருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் கட்டணத்தை வசூலிக்கும் பேருந்து நடத்துநர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார். பேருந்து கட்டண திருத்தத்திற்கு பின்னர் அதிக கட்டணம் வசூலிப்படுவதாக பல முறைப்பாடுகள் வந்துள்ளன என்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனைகளை தீர்க்கவே குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிகளவில் பேருந்து கட்டணம் அறவிடப்படுமானால் உடனடியாக 1955 என்ற எண்ணுக்கு அழைக்கவும் என்றும் கேட்டுக்கொண்டார். தொலைபேசியில் வரும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் நடமாடும் பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/yZWevsB https://ift.tt/h0Qjm4t #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/WceNxZk
https://ift.tt/HprVALF

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.