அறிமுகமான முதல் சீஸனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அறிமுகமான முதல் சீஸனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி தீர்மானித்து களமிறங்கியது. அதனடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. குஜராத் சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷீத் கான், யாஷ் தயாள், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர். அதனடிப்படையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 131 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதனடிப்படையில் அறிமுகமான முதல் சீஸனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/CVaI9ug https://ift.tt/Jfi5MaQ #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/e0HkQpn
https://ift.tt/3g6qv4l

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.