அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ஹர்ஷன கெக்குனவல இன்று (23) இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அஜித் நிவாட் கப்ரால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ தனது கட்சிக்காரருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அடுத்த விசாரணையில் அவர் ஆஜராகுவதாகவும் தெரிவித்தார்.
அதனடிப்படையில் குறித்தை வழக்கை ஜூன் மாதம் 25 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதுடன் அதுவரையில் அவருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பொது நிதியை மோசடி செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/MbNrAht https://ift.tt/IczrGeL #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/YW7qEKy
https://ift.tt/UCARwa7
https://ift.tt/UCARwa7
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.