May 22, 2022 at 12:33PM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 குரங்கு அம்மை தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ளும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம். உலகின் பல நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள மற்றும் நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர தெரிவித்துள்ளார். இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி அறிவியல் மற்றும் உயிரணு ஆய்வு நிறுவகத்தில் அது தொடர்பான பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என அவர் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார். மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று அடையாளம் காணப்பட்டது. அந்த நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயும் பரவத்தொடங்கியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு லண்டன் நகரில் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும், மற்றும் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் தொற்று தீவிரமடைந்துள்ளது. இதுவரையில், ஐரோப்பாவில் 80க்கும் அதிக குரங்கு அம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/zFwq928 https://ift.tt/IdbTF1U #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/1hiWzkt
https://ift.tt/M4gYzRG

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.