வாகனங்கள் இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

வாகனங்கள் இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு


இலங்கையில் முன்னுரிமை அடிப்படையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


எந்தவொரு இறக்குமதிக்கும் வெளிநாட்டு நாணயத்தை விடுவிப்பது முன்னுரிமையின் அடிப்படையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை மத்திய வங்கியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு ஆளுநர் பதிலளித்தார். 


இறக்குமதிக்கான பணத்தை ஒதுக்கும் போது, ​​பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த பாதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எந்தவொரு அரசியல் தலையீடுகளும் இன்றி மத்திய வங்கியை சுயாதீனமாக செயற்பட வைக்கப்  போவதாக நேற்றையதினம் பதவியை ஏற்றுக்கொண்ட போது ஆளுநர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌  ⸙ ━━━━━━━ ◈


👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

https://chat.whatsapp.com/JTJYUyANNtKKF4wgxF9vC7


https://chat.whatsapp.com/Fmlmh691mW06cQBwW4Ompz


#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/Internationaltamilmedia

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.