இலங்கையில் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள சிக்கல் - சட்டத்தால் ஏற்பட்டுள்ள மாற்றம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள சிக்கல் - சட்டத்தால் ஏற்பட்டுள்ள மாற்றம்.

இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர்.

 சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அதே பதவியில் நீடிக்க, ஏனைய அமைச்சர்கள் மட்டும் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர். 

எனினும் பிரதமர் பதவி விலகினால் தான் முழு அமைச்சரவையும் விலகியதாக அமையும் என இலங்கை அரசியல் சாசனம் வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அமைச்சர்கள் மட்டும் தமது பதவியை விலகிக் கொள்வது அரசியமைப்பின் 49இன் பிரகாரம் இது சாத்தியம் இல்லையென சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, இன்று பிரதமர் மஹிந்த சந்திக்கவுள்ளார். நாட்டில் நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர்கள் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/GUbT9n5 https://ift.tt/OP4sXCz 

#TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/30yeVjM
https://ift.tt/kMnVBgu

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.