இலங்கையில் 300 ரூபாவை தாண்டவுள்ள அரிசியின் விலை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் 300 ரூபாவை தாண்டவுள்ள அரிசியின் விலை

இலங்கையில் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்குள் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ அரிசிக்கு பதிலாக அரிசியின் சிறிய பக்கட்களையே மக்கள் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார். 

பொலநறுவையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 பசுமை விவசாயக் கொள்கையினால் மகா பருவத்தில் 50 வீதமான நெல் அறுவடை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்தால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும். 

ஒரு கிலோ அரிசி பக்கெட் இல்லாமல் சிறிய பக்கெட்டுகளில் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தற்போது அனைத்து வகை அரிசியின் விலைகளும் அதிகரித்துள்ளது. 

ஒரு கிலோ நாடு 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், ஒரு கிலோ கீரி சம்பா 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

அடுத்து வரும் வாரங்களில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/TdBeQvN https://ift.tt/xNF1ds2 

#TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/EzCuvSY
https://ift.tt/ZfpcoKv

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.