இலங்கையில் ஒரு கோப்பை தேனீரின் விலை சடுதியாக அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையில் ஒரு கோப்பை தேனீரின் விலை சடுதியாக அதிகரிப்பு.

இலங்கையில் ஒரு கோப்பை தேனீர் விலையை 60 ரூபாவாக உணவக உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளனர்.

 சீனி மற்றும் எரிவாயு விலை உயர்வால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 அண்மைக்காலமாக 30 ரூபாய்க்கு விற்பனையான ஏராளமான பொருட்கள் திடீரென இரு மடங்கு விலை உயர்ந்ததால், நுகர்வோர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

 உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 மேலும் விறகின் தேவை அதிகரித்துள்ளதுடன், ஐந்து சிறிய விறகுகள் கொண்ட ஒரு கட்டு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. 

எரிவாயு, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக விறகின் தேவை அதிகரித்துள்ளதுடன், இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு கட்டு விறகு 40 - 60 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

 சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள ஐந்து மற்றும் ஆறு மரத்துண்டுகள் கொண்ட ஒரு கட்டு விறகு நகர்ப்புறங்களில் 120 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/ghr8fjU https://ift.tt/tjd3pRB 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/NV3D1Ie
https://ift.tt/biavF3G

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.