சிறி லங்கா அரசாங்கம் அச்சிட்டுள்ள அதிகளவான பணத்தொகை! சிறி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
சிறி லங்கா அரசாங்கம் அச்சிட்டுள்ள அதிகளவான பணத்தொகை!

சிறி
லங்காவின் தற்போதைய அரசாங்கம் அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன (W. A. Wijewardena) தெரிவித்துள்ளார்.

 கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அசராங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 3043 ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த காலப்பகுதியில் பணம் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளது, இது பாரியளவு தொகையாகும். 

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாத காரணத்தினால், வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது. 

இதன் காரணமாக அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகளிடமிருந்து 4201 பில்லியன் ரூபா பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது. 

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை காலம் தாழ்த்திப் பெற்றுக்கொள்வதனால் எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/IG3LHpX https://ift.tt/LeM2fEw

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/ynCGuhW
https://ift.tt/8wofYXh

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.