பாராளுமன்றத்தில் 25 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பாராளுமன்றத்தில் 25 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.

பாராளுமன்றத்தில் 25 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அதன்படி ,கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட இந்த குழுவில் 5 பாராளுமன்ற காவல் அதிகாரிகளும் உள்ளனர். கொவிட் தொற்றுக்குள்ளான ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கும் அவசர சிகிச்சைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

 152 பாராளுமன்ற ஊழியர்களிடம் நேற்று முன்னெடுக்கப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில‍ேயே, 25 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

சபாநாயகர் உட்பட 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பாராளுமன்ற அதிகாரியொருவர் அண்மைய நாட்களில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

 இதன்படி 46 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இதேவேளை, எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் மீண்டும் ஒரு விரைவான ஆன்டிஜென் சோதனை நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/IEdB5cuTN
https://ift.tt/hZDAiMg1n

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.