அசாத் சாலி, ரங்காவின் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அசாத் சாலி, ரங்காவின் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணி மற்றும் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தேசிய ஐக்கிய முன்னணி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையின் படி தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்கவினால் இது தொடர்பிலான 2263/22 இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21ஆம் திகதி வெளியிட்டப்பட்டுள்ளது. 

இதற்கமைய - பிரஜைகள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய, எக்சத் லங்கா மகா சபா கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைச் சமர்ப்பிக்காமை போன்றன காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதேவேளை, 73 அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழு தேர்தலில் போட்டியிட அங்கீகரித்துள்ளது. புதிய அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பம் தேர்தல் ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

"குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர் பதவியில் நிலவும் சர்ச்சை மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த தற்காலிக தடையினை நீக்க முடியும்" என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://bit.ly/3r9BD6M
https://bit.ly/3r6XuvI

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.