கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு.


தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால், அந்த மருத்துவமனையினது சிகிச்சை பிரிவின் அதிகபட்ச கொள்ளளவை தற்போது எட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 891 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறதியானது.

 இதன்படி, தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து மூவாயிரத்து 654 ஆக உயர்வடைந்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேநேரம், நாட்டில் மேலும் 17 பேர் கொவிட்-19 தொற்றினால் நேற்று முன்தினம் மரணித்தனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக்கத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்கமைய, இதுவரை பதிவான கொவிட்-19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 330 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, 11 ஆயிரத்து 784 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.