108 பரீட்சை மத்திய நிலையங்கள்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

108 பரீட்சை மத்திய நிலையங்கள்.

2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்க்கொள்ளும் மாணவர்கள் எந்தவித அச்சமும் இன்றி பரீட்சைக்கு தோற்றுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் பரீட்சை ஆணையாளர் நாயகம் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இந்த பரீட்சையில் சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 63 பேரும், தமிழ் மொழியில் 85 ஆயிரத்து 446 பேரும் தோற்றவுள்ளனர். 

மொத்தமாக 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். இதற்கமைவாக 2,943 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. 

கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக 108 பரீட்சை மத்திய நிலையங்கள் செயற்பட இருப்பதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் கூறினார்.

 எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், புலமைப்பரிசில் பரீட்சை வழமைப்போன்று ஞாயிற்று கிழமை நடைபெறாது என்றும் ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை 9.30 பரீட்சை ஆரம்பமாகவுள்ளது என்றும் குறிப்பிட்டார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.