நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்.

புதிதாக திறக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுவது கொழும்பு துறைமுக நகர கொரோனா அலை உருவாகும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி ,பொதுமக்களின் நடத்தை புதிய கொரோனா அலையை உருவாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கண்டிப்பாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. 

அதன்படி இந்த விடயம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில ஊடகமொன்று, ஆதாரங்களின்படி, ஓமிக்ரோன் மாறுபாடு இலங்கையில் பரவி வருவதாகவும் கொழும்பு துறைமுக நகரத்தின் மெரினா நடைபாதையில் கூட்டம் கூடுவது தொற்றுநோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 கடந்த இரண்டு நாட்களாக, சமூக விலகல் இல்லாமல் உல்லாசப் பாதையில் நுழைவதற்கான முறைக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 வளாகத்திற்குள்கூட சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் நீண்ட வார இறுதியில் நடைபாதையில் நுழைந்த பெருந்திரளான மக்கள் முகக்கவசம் அணியாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50,000 பேர் பார்வைக்காக இந்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ,கொழும்பு துறைமுக நகர மெரினா நடைபாதை கடந்த வாரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.