களு கங்கையில் நீராட சென்ற இருவர் சடலமாக மீட்பு - சிறுவன் மாயம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

களு கங்கையில் நீராட சென்ற இருவர் சடலமாக மீட்பு - சிறுவன் மாயம்.

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஶ்ரீ பாலபந்ததல பகுதியில் களு கங்கையில் நீராடிக் கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 அவர்களில் ஒருவர் உயிருடன் காப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் நீரில் மூழ்கிய இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் 10 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அங்குராவதொட்ட பகுதியை சேர்ந்த 22 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுவனை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் சிறிபாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.