வெற்றுப் போத்தலை குடுத்தால் 10 ரூபா - புதிய திட்டம் அறிமுகம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வெற்றுப் போத்தலை குடுத்தால் 10 ரூபா - புதிய திட்டம் அறிமுகம்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் லங்கா சதொச நிறுவனம் புதிய தண்ணீர் போத்தல் ஒன்றை சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. 

இது குறித்து பந்துல குணவர்தன தெரிவிக்கையில். “இந்த குடிநீர் போத்தலை 35 ரூபாவிற்கு விற்கிறோம். அத்தோடு லங்கா சதொச நிறுவனம் மூலம், நாட்டின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களையும் இணைக்கும் விதமாக லங்கா சதொச நிறுவனம் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. 

ஒரு வெற்று போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் 10 ரூபாய் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

 அத்தோடு, இந்த முயற்சியின் மூலம் நாடு முழுவதும் குறைந்த விலையில் குடிநீர் போத்தல்கள் கிடைப்பதுடன், சுற்றுச்சூழலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக்கின் அளவைக் குறைப்பதற்கும் பங்களிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

“இதன் மூலம், மற்ற குடிநீர் போத்தல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சவால் விட நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அவர்களும் இந்த போத்தல்களை மீட்டெடுக்கும் முறையைப் பயன்படுத்தினால், அது சூழலுக்கு உகந்த வணிகமாக மாறும்” என்றார்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.