இனிமேல் பாணுக்கும் வரிசைதான். சொன்னது யாரு தெரியுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இனிமேல் பாணுக்கும் வரிசைதான். சொன்னது யாரு தெரியுமா?

எதிர்காலத்தில் பாணுக்கு பெரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன (NK.Jayawardena) தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பாணுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம். நாங்கள் நேற்று கோதுமை மா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். 

போதுமான அளவுக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யலாம், டொலர் இல்லாததே பிரச்சினை. அவர்களுக்கு இறக்குமதி செய்ய தேவையான டொலர்களில் 10 வீதம் மாத்திரமே கிடைப்பதாகவும் கூறினர். நாங்கள் என்ன செய்வது. 

அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். குறிப்பாக வரிசையில் நின்றும் பாணை கொள்வனவு செய்ய முடியாத நிலைமையை சாதாரண மக்கள் எதிர்நோக்கலாம். 

வெதுப்பக உரிமையாளர்கள் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்துள்ளனர். ஒரு மூட்டை கோதுமை மாவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL

 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.