ஆறுகளைச் சூழவுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

ஆறுகளைச் சூழவுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை.

மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் அவ்வப்போது திறக்கப்பட வேண்டியுள்ளதால், மகாவலி, கலாஓயா மற்றும் முண்டேனியாறு ஆகிய ஆறுகளின் நீரைப் பயன்படுத்தும் போது அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

அம்பாறை ரம்பகென் ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும், அனுராதபுரம் மாவட்டத்தில் யான் ஓயா நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் கட்டுப்பாட்டு செயலகப் பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

 மேலும், மட்டக்களப்பு, உன்னச்சிய நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகளும், ருகம் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

பொலன்னறுவை மாவட்டத்தில் பராக்கிரம சமுத்திரத்தில் எட்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பராக்கிரம சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட் டுள்ளதால் சுங்கவில முதல் சோமாவதி வரையிலான வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்படுவதால் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிக்கக் கூடும் என்பதால் ஆற்றங்கரையோர வீதிகளைப் பயன்படுத்துவதில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.