பாலர் பாடசாலை ஆசிரியைக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பாலர் பாடசாலை ஆசிரியைக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதி.

மினுவங்கொடை, நில்பனாகொட பிரதேசத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மினுவங்கொடை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா். 

தற்போது குறித்த பாலர் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் பாலர் பாடசாலை கல்வி கற்ற 20 மாணவர்கள், ஆசிரியை உள்ளிட்டோா் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

தொற்றுக்குள்ளான பாலர் பாடசாலை ஆசிரியைக்கு, சில தினங்களுக்கு முன்னர் கொரோனா நோய் அறிகுறிகள் இருந்தமையினால் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே அவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 யாரிடமிருந்து இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது இதுவரையில் உறுதியாகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

 மாணவர்களுக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை என்றும் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.